Archives: ஜூலை 2016

மனித இனம் (ஓட்டம்)

அலாரம் கடிகாரம் ஒலித்து நின்றது. இது மிகவும் சீக்கிரமாகத் தோன்றியது. முழுமையான ஓர் நாள் இன்னும் உங்களுக்கு முன் இருக்கிறது. வேலை செய்ய வேண்டும், நிர்ணயம் செய்யப்பட்ட காரியங்களை அதன் பிரகாரம் செய்து முடிக்க வேண்டும். கவனிக்க வேண்டிய மக்களை கவனிக்க வேண்டும். இதே போன்று அநேக காரியங்கள். ஆம் நீங்கள் தனிமையில் இல்லை. நம்மில் அநேகருக்கு எதைச்செய்ய வேண்டும் என்று தெரியாது, ஓர் காரியத்திலிருந்து மற்றோர் காரியத்தைச் செய்ய அங்கும் இங்கும் அவசரமாக ஓடிக்கொண்டிருப்போம். அதனால்தான் நாம் ஓட்டப்பந்தயம் ஓடும் மனிதர் என்று…

தந்திரமாக, எண்ணங்களை திசை திருப்புதல்

நானும், என் மனைவியும் முதல் முறையாக ஓர் எழுத்துப்பணி திட்டத்தை இணைந்து செயல்படுத்திய பொழுது, காலதாமதம் செய்வது என்பது ஓர் முக்கிய தடையாக இருக்கும் என்பதை மனவேதனையுடன் அறிந்து கொண்டோம். நான் எழுதியவற்றை பதிப்பிற்கு தயார் செய்வதும், என் கால அட்டவணைப்படி என்னைச் செயல்பட வைப்பதும் அவளுடைய பணியாகும். ஆனால் என்னுடைய செயல்கள் அவளைக் கோபத்திற்குள்ளாக்கும். அநேக சமயங்களில் குறிப்பிட்ட சமயத்தில் முடிக்காமலும், வழிமுறைகளை பின்பற்றாமலும் இருப்பது அவளுடைய தீர்மானங்களையும், பொறுமையையும் இழக்கச் செய்யும்.

ஓர் நாளில் இறுதியில் ஓர் குறிப்பிட்ட பகுதியை எழுதி…

அவர் அறிந்திருக்கிறார்

இரவில் அயர்ந்த நித்திரை செய்வதற்கு சில சிறு பிள்ளைகளுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஒருநாள் மாலை நான் அவள் படுக்கை அறையை விட்டு வெளிவந்த பொழுது, என் மகள் அப்படிப்பட்ட காரணம் ஒன்றை என்னிடம் “நான் இருட்டைப் பார்த்து பயப்படுகிறேன்” என்று கூறினாள். அவளுடைய பயத்தைப் போக்க முயற்சி செய்துவிட்டு, விடிவிளக்கை எரியவிட்டு, அந்த வெளிச்சத்தில் பயங்கர ஜந்துக்கள் ஒன்றும் இல்லை என்பதை அவள் அறிந்து கொள்ள விட்டு வந்தேன்.

சில வாரங்கள் கழித்து வியாபார விஷயமாக என் கணவன்…

நகராமல் நட

“மார்க்டைம் மார்ச்” என்ற இராணுவ உத்தரவின் அர்த்தம் என்னவெனில் முன்நோக்கிச் செல்லாமல் நிற்கும் இடத்திலேயே நட என்பதாகும். இது எந்த வித முன்னேற்றமுமின்றி அடுத்து முன்னேறிச் செல்வதற்கான கட்டளையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஓர் செயல் ஆகும்.

அன்றாட வாழ்க்கையிலும் முன்னேறிச் செல்லாத நிலைப்பாடு, எந்தவித நோக்கமும், வேலையும் செய்யாமல், ஆனால் அதே சமயத்தில் காத்திருக்கும் நிலையை “மார்க்டைம்” என்ற பதம் குறிப்பிடுகிறது. இது ஓர் தேக்கமுற்ற வாழ்க்கைச் சூழ்நிலை போன்று காணப்படுகிறது.

இதற்கு எதிர்மாறாக வேதத்தில் நாம் வாசிக்கும் ‘காத்திரு’ என்ற பதம் ஆவலோடு…

தவறாக இடத்தில் நம்பிக்கை

வெவ்வேறு பறவை இனங்கள் வாழ்ந்த அடர்ந்த காடுகள் நிறைந்த “கானா நாட்டிலுள்ள” ஒரு கிராமத்தில் நான் வாழ்ந்து வந்ததால் சிறு பிராயத்திலிருந்தே பறவைகளை உற்றுநோக்கி நேசிப்பது எனக்கு விருப்பமாக இருந்தது. அதை என் பழக்கமாக்கிக் கொண்டேன். இப்பொழுது நான் வாழும் புறநகர் பகுதியில் சில காகங்களின் செயல்களை சமீபத்தில் கவனித்த எனக்கு ஓர் ஆவலை உண்டாக்கியது. அவை ஓய்வெடுத்துக் கொள்வதற்காக இலைகள் இல்லாத ஓர் மொட்டை மரத்தை நோக்கிப் பறந்தன. அவை உறுதியான கிளைகளில் அமர்வதற்குப் பதிலாக, அவற்றின் எடையைத் தாங்காமல் வளைந்து ஒடிந்துவிடும்…